ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெறி வெற்றியை தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் மெர்சல். மூன்று வேடங்களில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
மெர்சல் படத்தில் நிறைய சிறப்பு அம்சங்கள் உள்ளன. தேனாண்டாள் பிலிம்ஸ்க்கு இது 100வது படம். விஜய் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 25வது ஆண்டு. ஆகையால் படத்தின் இசை வௌியீட்டை சென்னை, நேருஉள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடத்தினர். நிகழ்ச்சியின் ஆடியோ விழா தனியார் டிவி, பேஸ்புக், யூடியூப் உள்ளிட்டவைகளிலும் நேரடியாக ஔிப்பரப்பட்டது. விழாவில் விஜய் பேசியதாவது...
ரஹ்மானின் 25வது ஆண்டில் நான் பணியாற்றியதை எண்ணி பெருமை கொள்கிறேன். உலகத்துக்கே மெட்டு போட்டு ஆஸ்கர் வாங்கி மெர்சல் ஆக்கியவர், இப்போது மெர்சல்க்கு மெட்டு போட்டுள்ளார். படத்தில் பணியாற்றிய இயக்குநர் அட்லீ உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.
நான் அறிவுரை செய்வதாக எண்ண வேண்டாம். நான் அந்தளவுக்கு பெரிய ஆள் எல்லாம் கிடையாது. ஆனால் நெகட்டீவ் வேண்டாம், உங்க வேலையை சரியாக செய்யுங்கள். யாராவது எதிர்மறையாக பேசினால், அவர்களை கண்டு கொள்ளாதீர்கள் நண்பா என்று தான் சொல்வேன்.
எல்லோரும் நம்மை சீண்டுவார்கள். அதெல்லாம் நடக்கும். அதை புறக்கணித்துவிடுங்கள். எதுவும் இல்லாத போது உங்கள் தன்னம்பிக்கையும், எல்லாம் இருக்கும்போது உங்கள் அணுகுமுறையும் தான் முக்கியம். ஹிட், பிளாப், பிளாக்பஸ்டர் எல்லாம் கொடுத்துவிட்டீர்கள், அதை விட ரசிகர்களாகிய நான் உங்களை சம்பாதித்தது தான்.
அறிவுரை சொன்னால் என் மகன் கூட நான் சொல்வதை கேட்கமாட்டார். எனவே நீங்கள் முடிந்தால் நான் சொன்ன விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள், இல்லையென்றால் விட்டு விடுங்கள்.
மெர்சல் பற்றி சொல்ல வேண்டும் என்றால் துப்பாக்கின்னா தோட்டா இருக்கணும், கத்தின்னா ஷார்ப்பா இருக்கணும், தெறின்னா தெணாவெட்டா இருக்கணும், மெர்சல்ன்னா மிரட்டலா இருக்கணும்.
இவ்வாறு விஜய் பேசினார்.
நிகழ்ச்சியில் காஜல், சமந்தா உள்ளிட்ட மெர்சல் படக்குழுவினர் தவிர்த்து தனுஷ், பார்த்திபன், சிபிராஜ், சாந்தனு, மகத், பூர்ணிமா பாக்யராஜ், அழகப்பன், அபிராமி ராமநாதன் உள்ளிட்ட பல திரையுல பிரபலங்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை விஜய்யின் நண்பரும், நடிகருமான சஞ்சீவ் மற்றும் தொகுப்பாளினி ரம்யா தொகுத்து வழங்கினர்.