ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை வரவலட்சுமியும், விஷாலும் தீவிரமாக காதலித்து வருவதாக நீண்டகாலமாகவே செய்தி வெளியாகி வருகிறது. இருவரும் சேர்ந்து மதகஜராஜா படத்தில் நடித்தார்கள். அந்தப் படம் வெளிவரவில்லை. அதன்பிறகு இருவரும் இணைந்து நடிக்கவுமில்லை. இடையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியவர்கள் விஷாலை காமராஜர் ரேன்ஞ்சுக்கு ஒப்பிட்டு பேச... பின்னர் பேசிய விஷால் "காமராசர் மாதிரி மக்கள் பணியாற்றுவேன். அவர் மாதிரி திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க மாட்டேன். அப்படிச் செய்தால் மங்களகரமான நடிகை கோவித்துக் கொள்வார்" என்று தன் காதலை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில் லிங்குசாமி இயக்கும் சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தில் வரலட்சுமி நடிப்பது உறுதியாகி இருக்கிறது. ஆனால் அவர் கேரக்டர் பற்றி ரகசியமாக வைத்திருக்கிறார்கள்.
முதல்பாக கதைப்படி மீரா ஜாஸ்மின்தான் விஷாலின் காதலி. இரண்டாம் பாகத்தில் அந்த காதல் நிறைவேறாமல் போவதாக காட்டி மீரா ஜாஸ்மினை கழற்றி விடுகிறார்கள். புதிய காதலியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்த நிலையில் மாமனைத்தான் கட்டிக்குவேன் என்ற காத்திருக்கும் முறைப்பெண் கேரக்டரில் வரலட்சுமி நடிக்க இருப்பதாகவும், திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டி நடித்த மாதிரியான கேரக்டர் என்றும் கூறப்படுகிறது.