ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சூர்யாவை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான ஜோதிகா 8 ஆண்டுகளுக்குப் பிறகு '36 வயதினிலே' படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் தனது 2வது இன்னிங்ஸை தொடங்கினார்.
ஜோதிகாவை மையமாக வைத்து வெளிவந்த இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் கதாநாயகியை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மகளிர் மட்டும்' படத்தில் ஜோதிகா கதாநாயகியாக நடித்துள்ளார். 'குற்றம் கடிதல்' படத்தை இயக்கிய பிரம்மா.ஜி இப்படத்தை இயக்கியுள்ளார்.
ஜோதிகாவோடு பானுப்ரியா, ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 'யு' சான்றிதழ் வாங்கியுள்ள இப்படம் கடந்த மாதமே வெளியாகவிருந்தது. தொடர்ந்து பல பெரிய படங்கள் வெளியானதால் தள்ளி வைக்கப்பட்டநிலையில் மகளிர் மட்டும் படத்தை தற்போது, செப்டம்பர் 15ஆம் தேதி வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூர்யாவின் '2டி என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்தது. மகளிர் மட்டும் படத்தின் ரிலீஸ் தேதியாக செப்டம்பர் 15 ஆம் தேதியை தேர்வு செய்தது ஏன்? '36 வயதினிலே' திரைப்படம் 2015 ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி வெளியானது. படம் வெற்றியடைந்தது. எனவே சென்ட்டிமெண்ட்டாக 'மகளிர் மட்டும்' படத்தையும் 15 ஆம் தேதி (செப்டம்பர்) வெளியிட முடிவெடுத்ததாக சொல்லப்படுகிறது.
அதே தேதியில், மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா நடித்துள்ள 'துப்பறிவாளன்' படமும் வெளியாக இருக்கிறது.