அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாள முன்னணி நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார். இந்த கடத்தல் வழக்கில் முன்னணி நடிகர் திலீப் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இதில் பாதிக்கப்பட்ட நடிகை குறித்து பூன்ஜார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.சி.ஜார்ஜ் அண்மையில் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அதில் "பலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நடிகை கூறியிருக்கிறார். அப்படியென்றால் எப்படி அவரால் மறுநாளே படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்க முடியும்" என்று கூறியிருந்தார். அவரின் இந்த கருத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நடிகை கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்தில் அவர் கூறியிருப்பதாவது:
இப்படி ஒரு கடிதத்தை எழுத வேண்டிய நிலை ஏற்படும் என நான் நினைக்கவில்லை. அரசியல் கட்சி தலைவரும், மக்கள் பிரதிநிதியுமான பி.சி.ஜார்ஜ் என்னைப்பற்றி மிகவும் மோசமாக பேசி வருகிறார். நான் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பின் நானும், எனது குடும்பமும் அனுபவித்த துன்பத்தை எழுத்து மூலமோ, விவரித்தோ என்னால் கூற முடியாது. ஒவ்வொரு நிமிடமும் வேதனையால் துடித்து வருகிறேன். ஆனால் எந்த நிமிடமும் தளர்ந்து விடக்கூடாது என நான் உறுதியாக இருக்கிறேன். மனதை திடப்படுத்தி உயிர் வாழ்கிறேன்.
நான் தோல்வி அடைந்து விட்டால் என்னைப்போல பாதிக்கப்பட்ட பல பெண்களும் துவண்டு விடுவர். பி.சி.ஜார்ஜ் எம்எல்ஏ கூறியது போல நான் மறுநாளே படப்பிடிப்புக்கு செல்ல வில்லை. 10 நாட்கள் கழிந்து தான் சென்றேன். அதுவும் படப்பிடிப்பு ஒப்பந்தத்தை மீற முடியாமல் தான் நடிக்க சென்றேன். படப்பிடிப்பு குழுவினரின் ஆதரவால் மீண்டும் நடிக்க வந்தேன்.
சினிமா மூலம் கிடைக்கும் பணத்தில் தான் என் குடும்பம் பிழைத்து வருகிறது. எனக்கு நடந்த கொடூர சம்பவத்திற்கு பிறகு நான் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என பி.சி.ஜார்ஜ் எதிர்பார்க்கிறார் என கருதுகிறேன். இந்த வழக்கில் போலீசார் மற்றும் அரசு மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் நடிகை குறிப்பிட்டுள்ளார்.