ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமாவுக்கான சேவை வரியை மத்திய அரசு நீக்காவிட்டால், ஒட்டுமொத்த திரையுலகை மூடும் சூழல் உருவாகும், இதனால் சினிமா உலகமே அழிந்துவிடும் என்று பட அதிபர்கள் கூறியுள்ளனர். மத்திய அரசு, சினிமா துறைக்கு சேவை வரியை வித்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த சினிமா துறையும் கவலை அடைந்துள்ளது. இந்நிலையில் பிலிம்சேம்பர் தலைவர் கல்யாண், திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர், மற்றும் திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் அண்ணாமலை மற்றும் படஅதிபர்கள் கூட்டாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், ஏற்கனவே சினிமா துறைக்கு அந்தந்த மாநிலங்களில் பொழுபோக்கு என்ற வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்போது மத்திய அரசும் இந்தியா முழுக்க உள்ள திரைத்துறைக்கு சேவை வரியை விதித்துள்ளது. ஏற்கனவே நலிந்து வரும் சினிமா துறைக்கு, இப்போது இந்த சேவை வரியால் மேலும் நலிவடையும் சூழல் ஏற்படும்.
தமிழ்நாட்டில் தியேட்டர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. அதுமட்டுமின்றி 300க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசாகமால் பெட்டிக்குள் முடங்கி கிடக்கின்றன. இதனால் கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய் வரை முடங்கிக் கிடக்கிறது. படங்களை விளம்பரப்படுத்த நாங்களும் சில தவறுகளை செய்கிறோம். படம் வெளிவந்த மறுநாளே வசூல் மழையில் என்று விளம்பரபடுத்துகிறோம். ஒருவேளை இதை நம்பி மத்திய அரசு இந்த சேவை வரியை கொண்டு வருகிறதோ என்னவோ...! வெளியாகும் படங்களில் கால்வாசி படங்கள் தான் வெற்றி பெறுகின்றன. முக்கால்வாசி படங்கள் நஷ்டமடைகின்றன. இதனால் மத்திய அரசு சினிமா துறை மீதான சேவை வரியை ரத்து செய்ய வேண்டும். இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சரை சந்தித்து முறையிட உள்ளோம்.
ஒருவேளை மத்திய அரசு பிடிவாதமாக இந்த சேவை வரியை கொண்டு வந்தால், ஒட்டு மொத்த சினிமா துறையும் இழுத்து மூட வேண்டியது தான். இதனால் சினிமா உலகமே அழிந்து விடும். தியேட்டர்களில் இனியும் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களை சங்கடப்படுத்த விரும்பவில்லை. அதனால் தான் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.