ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமந்தாவைப் போன்று தமிழில் முன்னணி இடத்தை பிடிக்க முடியாமல் தெலுங்கிற்கு சென்றவர் ரகுல் பிரீத் சிங். அங்கு சென்று நடித்து சில படங்களிலேயே முன்னணி நடிகையாகி விட்டார் அவர். தற்போது ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று படங்களில் நடித்து வருபவர், சில மெகா படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டிருக்கிறார். ஆக, தற்போது நடித்து வரும் இரண்டு படங்களும் திரைக்கு வரும்போது தமிழிலும் முன்னணி நடிகையாகி விடுவார் ரகுல் பிரீத் சிங்.
இந்நிலையில், ரகுல் பிரீத் சிங், தனது வருங்கால கணவர் குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், எனது கணவர் என்னை விட உயரமானவராக இருக்க வேண்டும். முக்கியமாக ரொம்ப நல்லவராக இருக்க வேண்டும். யாரையும் பார்த்த உடனே நல்லவரா கெட்டவரா என்பதை முடிவு செய்து விட முடியாது. அதனால் பார்த்து பழகி நல்லவராக இருந்தால் அந்த நபரை திருமணம் செய்வேன். திருமண விசயத்தில் நான் அவசரம் காட்டமாட்டேன் என்று கூறியுள்ளார் ரகுல் பிரீத் சிங்.