ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தான் நடிக்கும் படத்தின் புரமோஷனுக்கு வருவதில்லை என்பதில் பிடிவாதமாக இருந்து வரும் நயன்தாரா முதல்முறையாக அறம் படத்தின் புரமோஷனில் கலந்து கொண்டிருக்கிறார்.
சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியாக டிவி ஒன்றில் அறம் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மட்டுமல்ல, அதைப் பற்றி தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலும் தகவல் வெளியிட்டிருக்கிறார். கோட்டப்பாடி ஜெ. ராஜேஷ் என்பவரது தயாரிப்பில் கோபி நயினார் இப்படத்தை இயக்கியுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தின் கதைக்கு உரிமை கொண்டாடிய மீஞ்சூர் கோபிதான், கோபிநயினார் என்ற பெயரில் தற்போது இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அறம் படத்தில் கலெக்டராக நடித்திருக்கிறார் நயன்தாரா.
இதற்கு முன் அவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் கெஞ்சிக்கேட்ட போதெல்லாம் புரமோஷனுக்கு வரமாட்டேன் என்று சொன்னவர் இப்போது அறம் படத்தின் புரமோஷனுக்கு மட்டும் சென்றது ஏன்?
கோட்டப்பாடி ஜெ. ராஜேஷ் வேறுயாருமல்ல... நயன்தாராவின் மானேஜர். அதனால் தான் அறம் படத்தின் புரமோஷனுக்கு சென்றுள்ளார் நயன்தாரா.
இன்னொரு தகவலும் சொல்கிறார்கள் சிலர். அறம் படத்தின் உண்மையான தயாரிப்பாளரே நயன்தாரா தான். அதனால்தான் இறங்கி வேலை செய்கிறார் என்று சொல்கின்றனர்.