ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிக்பாஸ் வீட்டில் பல நேரங்களில் எதிரும் புதிருமாக இருப்பது போல காட்டிக் கொண்டாலும், திட்டிக் கொண்டாலும் அடிப்படையில் அன்பாக ஒருவர் மீது ஒருவர் அக்கறையாக இருந்து வந்தவர்கள் ஷக்தியும், காயத்ரியும். இதற்கு ஒரு அடிப்படை காரணம் உண்டு. காயத்ரியின் தந்தை ரகுமராம் மாஸ்டரும், ஷக்தியின் தாத்தா பீதாம்பரமும் நெருங்கிய நண்பர்கள். அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ராமராவ் படங்களில் தொடர்ச்சியாக ரகுராம் டான்ஸ் மாஸ்டராகவும், பீதாம்பரம் மேக்அப் மேனாகவும் பணியாற்றி வந்தார்கள். இருவம் குடும்ப நண்பர்களாக இருந்தார்கள். இந்த குடும்ப உறவு பிக்பாஸ் வீட்டிலும் இருந்தது.
ஷக்தி வெளியேறியபோது காயத்ரி கதறி அழுதது இதைத்தான் காட்டியது. ஷக்தி வெளியேறிய பிறகு காயத்திரி தான் தனிமையில் இருப்பதை போன்று உணர்கிறார். ரெய்சா மீது கடும் கோபத்தை காட்டுகிறார். தனியாக புலம்பிக் கொண்டு திரிகிறார். அடுத்த வாரம் நான் வெளியேறிவிடுவேன் என்றும் காயத்ரி சொல்லிக் கொண்டு பிக்பாஸில் புலம்பியபடி தவித்து வருகிறார். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.