மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா. அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றபோது அதிகப்படியான வாக்குகள் பெற்றிருந்தார் என்பதோடு, அவரை பிக்பாஸில் உள்ளவர்கள் யாரேனும் திட்டினால் கூட ஓவியாவுக்கு ஆதரவாக ரசிகர்கள் குரல் கொடுத்தனர். அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தார் ஓவியா.
ஒரு கட்டத்தில் அவர் ஆரவை காதலிப்பதாகவும், அதையடுத்து ஓவியாவின் காதலை ஆரவ் ஏற்றுக்கொள்ளாததால் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது. அதன்பிறகு பிக்பாஸில் இருந்து வெளியேறினார் ஓவியா. இந்த நிலையில், ஓவியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால், அவர் மீது பிக்பாஸ் செட் போடப்பட்டிருக்கும் சென்னையை அடுத்துள்ள நசரத் பேட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து காவல்நிலையத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு ஓவியாவுக்கு போலீஸ் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாம். அதனால் விரைவில் நசரத் பேட்டை காவல் நிலையத்தில் ஆஜராகி ஓவியா விளக்கமளிப்பார் என்று தெரிகிறது.