ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா. அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றபோது அதிகப்படியான வாக்குகள் பெற்றிருந்தார் என்பதோடு, அவரை பிக்பாஸில் உள்ளவர்கள் யாரேனும் திட்டினால் கூட ஓவியாவுக்கு ஆதரவாக ரசிகர்கள் குரல் கொடுத்தனர். அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தார் ஓவியா.
ஒரு கட்டத்தில் அவர் ஆரவை காதலிப்பதாகவும், அதையடுத்து ஓவியாவின் காதலை ஆரவ் ஏற்றுக்கொள்ளாததால் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது. அதன்பிறகு பிக்பாஸில் இருந்து வெளியேறினார் ஓவியா. இந்த நிலையில், ஓவியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால், அவர் மீது பிக்பாஸ் செட் போடப்பட்டிருக்கும் சென்னையை அடுத்துள்ள நசரத் பேட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து காவல்நிலையத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு ஓவியாவுக்கு போலீஸ் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாம். அதனால் விரைவில் நசரத் பேட்டை காவல் நிலையத்தில் ஆஜராகி ஓவியா விளக்கமளிப்பார் என்று தெரிகிறது.