ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் பூ, மரியான், உத்தமவில்லன் ஆகிய படங்களில் நடித்தவர் மலையாள நடிகை பார்வதி மேனன். குறிப்பாக, பூ படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அதன்பிறகு தமிழில் பெரிய ரவுண்டு வருவார் என்ற எதிபார்க்கப்பட்ட அவர், தான் எதிர்பார்த்த மாதிரியான கதைகள் அமையாததால் மீண்டும் மலையாளத்திற்கே சென்று விட்டார்.
இந்நிலையில், தற்போது உதயநிதி ஸ்டாலினை நாயகனாக வைத்து பிரியதர்ஷன் இயக்கி வரும் பெயரிடப்படாத படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் பார்வதி மேனன். கடந்த ஆண்டு மலையாளத்தில் பகத்பாசில்-அபர்ணா முரளி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மகேஷின்டே பிரதிகாரம் என்ற படத்தின் ரிமேக்கில் உருவாகும் இந்தபடத்தின் படப்பிடிப்பு தற்போது குற்றாலத்தில் நடந்து வருகிறது. தொடர்ந்து 40 நாட்கள் அந்த லொகேசனில் தான் படப்பிடிப்பு நடக்கிறதாம்.
இந்த படத்திலும் பூ படத்தில் நடித்தது போலவே கிராமத்து வேடத்தில் நடித்து வருகிறார் பார்வதி மேனன். தமிழைப்போலவே மலையாளத்திலும் பல படங்களில் அவர் சவாலான வேடங்களில் நடித்திருப்பதால், இந்த படத்தில் பார்வதி மேனன் கதாபாத்திரத்திற்கு கூடுதல் வலு சேர்த்திருக்கிறாராம் பிரியதர்ஷன்.