ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தற்போது நடத்தி வரும் காமெடி நாடகம் சொப்பன வாழ்வில். ஒய்.ஜி.மகேந்திரனுடன் பிருந்தா, சுப்புணி, யுவஸ்ரீ உள்பட பலர் நடித்திருக்கிறார். கோபு பாபு கதை, வசனம் எழுதியுள்ளார், ஒய்.ஜி.மகேந்திரன் இயக்குகிறார். அப்பாவியான ஒருவனை இந்த சமூகம் அவமதிப்பதும், அந்த அப்பாவி ஒரு நாள் அடப்பாவியாகி தன்னை அவமதித்தவர்களை பழிவாங்குவததும் தான் கதை.
இந்த நாடகம் சென்னையில் தொடங்கி உலக நாடுகளுக்கும் சென்று வந்து விட்டது. இதுவரை 99 மேடையேறிவிட்ட இந்த நாடகம் வருகிற ஆகஸ்ட் 15ந் தேதி சுதந்திர தினத்தன்று 100வது மேடையேறுகிறது. ஒய்ஜிபி அரங்கில் இரவு 7 மணிக்கு நடக்கும் 100வது மேடையேறும் விழாவில் நடிகை சிம்ரன், நடிகர் பகத் பாசில், இயக்குனர் வசந்த், இசை அமைப்பாளர் தேவா உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள். இதற்கு முன்பு ஒய்.ஜி.மகேந்திரன் நடத்திய காசேதான் கடவுளடா, வியட்நாம் வீடு, பரீட்சைக்கு நேரமாச்சு நாடகங்களும் 100 மேடைகளை தாண்டி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.