ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வாணி ராணி, தாமரை, தலையணை பூக்களில் நடித்துக் கொண்டிருந்த நீலிமா ராணி, குழந்தை பேறுக்காக சின்ன பிரேக் எடுத்துக் கொண்டார். தற்போது பெண் குழந்தைக்கு தாயாகி இருக்கிறார். அந்த குழந்தைக்கு அதிதி இசை என்று அழகான பெயரும் வைத்துள்ளார். இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
முன்பு நடித்த அதே சீரியல்களில் மீண்டும் நடிக்கிறார். அதெப்படி 2 மாத இடைவெளிக்கு பிறகு அதே கேரக்டர்களில் தொடர முடியும் என்ற கேள்விக்கு சீரியலில் எல்லாமே சாத்தியம் என்பதுதான் பதில்.
தலையணைப் பூக்களில் வேலைக்கார பெண் மல்லிகாகவாக நடித்தவர். கதைப்படி அவர் சில காலம் காணாமல் போய் இப்போது 5 நட்சத்திர ஓட்டல் முதலாளியம்மாவாக திரும்புகிறார். அது எப்படி என்பது இனி வரும் எபிசோட்களில் தெரியும்.
தாமரை தொடரில் சிநேகாகவா நடித்தவர். இப்போது கவிதாவாக திரும்புகிறார். வாணி ராணியில் எரித்துக் கொல்லப்பட்ட டிம்பிளாக நடித்தவர் இப்போது மீண்டும் உயிருடன் திரும்பி வருகிறார். இப்படி நீலிமா ராணிக்காக கதையில் சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள். இதோடு சில புதிய சீரியல்களிலும், சில திரைப்படங்களிலும் நடிக்க இருக்கிறார்.