அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா |
வாணி ராணி, தாமரை, தலையணை பூக்களில் நடித்துக் கொண்டிருந்த நீலிமா ராணி, குழந்தை பேறுக்காக சின்ன பிரேக் எடுத்துக் கொண்டார். தற்போது பெண் குழந்தைக்கு தாயாகி இருக்கிறார். அந்த குழந்தைக்கு அதிதி இசை என்று அழகான பெயரும் வைத்துள்ளார். இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
முன்பு நடித்த அதே சீரியல்களில் மீண்டும் நடிக்கிறார். அதெப்படி 2 மாத இடைவெளிக்கு பிறகு அதே கேரக்டர்களில் தொடர முடியும் என்ற கேள்விக்கு சீரியலில் எல்லாமே சாத்தியம் என்பதுதான் பதில்.
தலையணைப் பூக்களில் வேலைக்கார பெண் மல்லிகாகவாக நடித்தவர். கதைப்படி அவர் சில காலம் காணாமல் போய் இப்போது 5 நட்சத்திர ஓட்டல் முதலாளியம்மாவாக திரும்புகிறார். அது எப்படி என்பது இனி வரும் எபிசோட்களில் தெரியும்.
தாமரை தொடரில் சிநேகாகவா நடித்தவர். இப்போது கவிதாவாக திரும்புகிறார். வாணி ராணியில் எரித்துக் கொல்லப்பட்ட டிம்பிளாக நடித்தவர் இப்போது மீண்டும் உயிருடன் திரும்பி வருகிறார். இப்படி நீலிமா ராணிக்காக கதையில் சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள். இதோடு சில புதிய சீரியல்களிலும், சில திரைப்படங்களிலும் நடிக்க இருக்கிறார்.