ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கிய மாலை நேரத்து மயக்கம் படத்தில் நடித்தவர் வாமிகா கபி. பாலிவுட்டிலிருந்து அவரை அழைத்து வந்தார் செல்வராகவன். மாலை நேரத்து மயக்கம் படத்தில் அவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. படம் வெற்றி பெறாததால் அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது ஹிந்தி மற்றும் பாஞ்சாபி படங்களில் நடித்து வரும் வாமிகா. மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார்.
நயன்தாரா நடித்த மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கும் படம் இறவாக்காலம். இந்தப் படம் மாயா போன்றே ஒரு திகில் படம். இதில் எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா, வாமிகா இந்த மூவரும் தான் முக்கிய கேரக்டர்கள். மூவரைச் சுற்றித் தான் கதையே நடக்கும். இந்தப் படத்தின் மூலம் மாலை நேரத்து மயக்கத்தில் விட்ட இடத்தை பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் வாமிகா. படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என்.முரளி ராமசாமி தயாரிக்கிறார். 50 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது.