ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பெரிய இயக்குனர்களின் படங்களில் மட்டுமே பணியாற்றி வந்த ஒளிப்பதிவாளார் பி.சி.ஸ்ரீராம், அறிமுக இயக்குனரின் படமான ரெமோ படத்தில் சிவகார்த்திகேயனுடன் பணியாற்றி ஆச்சர்யத்தை உண்டாக்கினார். இனி திறமையான புதிய இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றும் தெரிவித்தார்.
அதன்படி ஆரண்ய காண்டம் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கும் அநீதி கதைகள் படத்தில் பணியாற்ற ஒப்புக் கொண்டிருந்தார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், சமந்தா நடிக்கிறார்கள். இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடந்தது. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் குறிப்பிட்ட காலத்தில் திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில் பி.சி.ஸ்ரீராம் அநீதி கதைகள் படத்திலிருந்து விலகிக் கொண்டிருக்கிறார். அநீதி கதைகள் இரண்டாம்கட்ட படப்பிடிப்புக்காக அவரை அணுகியபோது. அவர் நிவின் பாலி நடிப்பில் ஜெயந்திரா இயக்கும் தெலுங்கு படம் ஒன்றிலும், பேடுமேன் என்ற ஹிந்திப் படத்திலும் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் என்றும் அந்தப் படங்களின் வேலைகளில் பிசியாக இருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். வேறு வழியின்றி பி.சி.ஸ்ரீராமுக்கு பதிலாக பி.எஸ்.வினோத்தை ஒளிப்பதிவாளராக்கி உள்ளனர். சரியான திட்டமிடல் இல்லாத படங்களில் பி.சி.ஸ்ரீராம் பணியாற்றுவதில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.