ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
லிங்குசாமி தயாரித்த ரஜினிமுருகன் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக, தொடர்ந்து தனது நண்பர் ராஜா தயாரிக்கும் படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். முதல் தயாரிப்பாக 'ரெமோ' படத்தைத் தயாரித்த 24 ஏ.எம். ஸ்டுடியோஸ், அடுத்து மோகன்ராஜா இயக்கத்தில் 'வேலைக்காரன்' படத்தையும் ஆரம்பித்தது.
அது மட்டுமல்ல, தொடர்ந்து பொன்ராம், இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிகுமார் ஆகியோரது படங்களில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும் இந்த படங்களையும் 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் பட நிறுவனமே தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
“ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு அட்வான்ஸ் கொடுத்திருப்பதாகவும், எங்களுக்கு கால்ஷீட் கொடுக்காமல் 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்கு அடுத்தடுத்து படம் பண்ணக் கூடாது” என்று தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில், ஸ்டுடியோக்ரீன் கே.இ.ஞானவேல்ராஜா, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், வேந்தர் மூவீஸ் மதன் (சார்பில் டி.சிவா) ஆகிய மூன்று தயாரிப்பாளர்களும், புகார் கொடுத்தனர்.
மூன்று தயாரிப்பாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், சிவகார்த்திகேயனை அழைத்து பேசிய தயாரிப்பாளர்கள் சங்கம், மூவருக்கும் கால்ஷீட் கொடுத்து பிரச்சனையை சுமுகமாக முடிக்கும்படி கேட்டுக்கொண்டது. அதற்கு சிவகார்த்திகேயனும் ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், 'நானும் ரௌடிதான்' பட இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தையும் 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனமே தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் இப்போது மீண்டும் இந்த பிரச்னை வெடிக்கும் என தெரிகிறது. இதனால் ஆரம்பநிலையிலேயே சிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன் படத்திற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டிருக்கிறது.