பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
கேரளாவில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக விஜய் படத்திற்கு வரவேற்பு இருக்கும். காரணம் விஜய்க்கு அங்குள்ள ரசிகர்களும் அதிகம். ரசிகர் மன்றங்களும் அதிகம். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்து செட்டிலாகும் நடிகைகள், வந்ததுமே தாங்கள் விஜய் ரசிகை எனக் கூறி ஐஸ் வைப்பதுண்டு.
ஆனால் பிசாசு புகழ் பிரயாகா மார்ட்டின், தான் சிறு வயதிலிருந்தே விஜய்யின் தீவிர ரசிகை என்கிறார். விஜய் நடித்த ஒரு சூப்பரான படத்தை பார்க்கும்போது, விஜய் ரசிகர்கள் அல்லாதவர்களுக்கு கூட எனர்ஜி அதிகரிக்கும்” என சமீபத்தில் கூறியுள்ளார் பிரயாகா மார்ட்டின்.
சரி இப்போது என்ன திடீர் விஜய் புராணம் என்றால் காரணம் இருக்கிறது. மலையாளத்தில் தற்போது உருவாகி வரும் 'போக்கிரி சைமன்' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் பிரயாகா மார்ட்டின். விஜய்யின் கேரக்டரையும் கேரளாவில் உள்ள அவரது தீவிர ரசிகர்கள் மூவரையும் மையப்படுத்தி 'போக்கிரி சைமன்' என்கிற பெயரில் ஒரு படத்தையே உருவாக்கி வருகின்றனர். இந்தப்படத்தில் பிரயாகாவும் விஜய் ரசிகராகவே நடித்துள்ளாராம்.