ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கேரளாவில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக விஜய் படத்திற்கு வரவேற்பு இருக்கும். காரணம் விஜய்க்கு அங்குள்ள ரசிகர்களும் அதிகம். ரசிகர் மன்றங்களும் அதிகம். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்து செட்டிலாகும் நடிகைகள், வந்ததுமே தாங்கள் விஜய் ரசிகை எனக் கூறி ஐஸ் வைப்பதுண்டு.
ஆனால் பிசாசு புகழ் பிரயாகா மார்ட்டின், தான் சிறு வயதிலிருந்தே விஜய்யின் தீவிர ரசிகை என்கிறார். விஜய் நடித்த ஒரு சூப்பரான படத்தை பார்க்கும்போது, விஜய் ரசிகர்கள் அல்லாதவர்களுக்கு கூட எனர்ஜி அதிகரிக்கும்” என சமீபத்தில் கூறியுள்ளார் பிரயாகா மார்ட்டின்.
சரி இப்போது என்ன திடீர் விஜய் புராணம் என்றால் காரணம் இருக்கிறது. மலையாளத்தில் தற்போது உருவாகி வரும் 'போக்கிரி சைமன்' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் பிரயாகா மார்ட்டின். விஜய்யின் கேரக்டரையும் கேரளாவில் உள்ள அவரது தீவிர ரசிகர்கள் மூவரையும் மையப்படுத்தி 'போக்கிரி சைமன்' என்கிற பெயரில் ஒரு படத்தையே உருவாக்கி வருகின்றனர். இந்தப்படத்தில் பிரயாகாவும் விஜய் ரசிகராகவே நடித்துள்ளாராம்.