அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார் ரன்பீர் கபூர். இவர், சஞ்சய் தத் நடித்துள்ள பூமி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது பேசிய செய்தியாளர்களிடம், ஜகா ஜசூஸ் படத்தின் தோல்விக்கு உங்கள் தந்தை ரிஷி கபூர், அப்படத்தின் இயக்குநர் அனுராக் பாசுவை குற்றம் சுமத்தினாரே. இதுப்பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டபோது, அதற்கு பதிலளித்த ரன்பீர்...
என் தந்தை மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர். என் பாதுகாக்க வேண்டி அவர் அப்படி சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் சொன்ன கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஜகா ஜசூஸ் படத்திற்காக நாங்கள் மூன்றாண்டுகளாக கடினமாக உழைத்தோம். படம் எப்படி உருவானது என்று எங்களுக்கு தெரியும். படங்களில் வெற்றி, தோல்வி சகஜமானது தான். நான் இதை தோல்வியை கருதவில்லை, ஒரு பாடமாக கருதுகிறேன். இந்தப்படம் நிறைய அனுபவத்தை தந்திருக்கிறது என்று கூறியுள்ளார்.