ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமான காமெடி நடிகர் சூரி, தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராகிவிட்டார். சூரி முதன் முறையாக நேற்று நிருபர்களுக்கு தனியாக பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
1996ம் ஆண்டு சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தேன். 20 வருஷம் ஓடிப்போச்சு. வந்த புதுசுல வாய்ப்பு கிடைக்கல பெயிண்டர் வேலைக்கு போனேன். சினிமாவுல செட் அசிஸ்டெண்டா வேலை பார்த்தேன். நண்பர்கள் உதவியோடு நாடகம் போட்டேன். அப்புறம் சினிமாவுல சின்ன சின்ன வேடங்கள் கிடைச்சுது.
ஜீ படத்துல அஜித்துடன் நடிச்சேன். அது லிங்குசாமி பிடிச்சுது. அவர் சிபாரிசுல இயக்குநர் எழிலின் தீபாவளி படத்துல சின்ன கேரக்டர்ல நடிச்சேன். அப்பதான் உதவி இயக்குனரா இருந்த சுசீந்திரன் பழக்கம் ஆனாரு. அவர் இயக்குனரானதும் வெண்ணிலா கபடி குழுவுல நடிக்க வச்சாரு. அதுல வர்ற புரோட்டா காமெடி தான் என்னை புஷ்பா புருஷன் வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியிருக்கு.
இன்னிக்கு நான் நல்லா இருக்கேன், வசதியா இருக்கேன்னா, அதுக்கு என்னை இயக்கிய இயக்குனர்கள், பணம் போட்ட தயாரிப்பார்கள். பார்த்து ரசித்த மக்கள், தட்டிக்கொடுத்து வழி நடத்திய மீடியாக்கள் தான் காரணம். எனக்குள்ள கொஞ்சமாச்சும் காமெடி இருக்குன்னா. அதுக்கு என் அப்பாதான் காரணம்.
தன்னை சுத்தி இருக்கிறவங்களை எப்போதும் சிரிக்க வச்சவர் அவர். அவர் காமெடி சென்சுல 10 சதவீதம் கூட நான் கொண்டு வரவில்லை. 50 சதவீதமாவது கொண்டு வந்திடனும்னு போராடிக்கிட்டிருக்கேன். என்னோட ரோல் மாடல், என்னோட ஹீரோ என் அப்பாதான். எல்லா ஹீரோக்களுக்கும் நண்பனாக நடிச்சேன். நிஜத்துல ஒரு ஹீரோவுக்கு மகனா இருந்தேன். இன்னும் சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டியது இருக்கு.
சில பேர் ஹீரோவாக நடிக்க கூப்பிட்டாங்க. ஆள விடுகங்ன்னு சொல்லிட்டேன். இப்படியே ஹீரோ பிரண்டா கடைசி வரைக்கும் வண்டி ஓடினா போதும். ஆனால் எனக்கும் நயன்தாரா, ஹன்சிகா, காஜல் கூட டூயட் பாடணும்னு ஆசை இருக்கு. ஆனால் அந்த ஆசை அவுங்களுக்கு இருக்கணுமே. என்றார் சூரி.