மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தனுஷ் நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகம் நாளை வெளிவருகிறது. அதற்கு பிறகு எனை நோக்கி பாயும் தோட்டா வெளிவருகிறது. இதற்கிடையில் வடசென்னை படம் 80 சதவிகிதம் முடிந்திருக்கிறது. அடுத்து மாரி இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். ஒரு ஹாலிவுட் படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்.
ஏற்கெனவே பவர் பாண்டி படத்தை இயக்கி வெற்றி கண்ட தனுஷ், அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அவர் தனது மாமனாரும், சூப்பர்ஸ்டாருமான ரஜினியை இயக்கும் ஆசையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:
ரஜினி நடிக்கும் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பது எனது ஆசை. அவருக்காக 15 கதை வரைக்கும் ஒன்லைனா ரெடியா வச்சிருக்கேன். எப்போது வாய்ப்பு அமையுதோ அப்போது அவரை இயக்குவேன். இப்போது அவரது படத்தின் தயாரிப்பாளராக இருப்பதே பெருமையா இருக்கிறது. என்கிறார் தனுஷ்.