14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
பெண்களை இழிவாகவோ, தரக்குறைவாகவோ விமர்சிக்க கூடாது, சமுதாயத்தில் பெண்களை மதிப்பவன் நான் என நடிகர் விஜய், தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
விஜய் படத்தை விமர்சித்திற்காக பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரனை, சமீபத்தில் சமூக வலைதளங்களில் கண்டபடி விமர்சித்தனர் விஜய் ரசிகர்கள். இதற்காக விஜய் ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார் தன்யா. மேலும் தனது ரசிகர்களை விஜய் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார் தன்யா.
இந்நிலையில் நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு ஒரு அறிக்கை வௌியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது...
சமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் நான். யாருடைய திரைப்படத்தையும், யாரும் விமர்சிப்பதற்கு கருத்து சுதந்திரம் உண்டு.
எக்காரணம் கொண்டும், எந்த நேரத்திலும், பெண்களை இழிவாகவோ, தரக்குறைவாகவோ, விமர்சிக்க கூடாது என்பது எனது கருத்தாகும். அனைவரும் பெண்மையை போற்ற வேண்டும்..
யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில், சமூக இணையதளங்களில் பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.