ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கவுதம் மேனனின் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. நல்ல பாடகியுமான ஆண்ட்ரியா, தற்போது ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள தரமணி படத்தில் புதுமுகம் வசந்த் ரவி ஜோடியாக நடித்திருக்கிறார். இப்படம் இந்தவாரம் வெளிவர இருக்கையில் படக்குழுவினர் அனைவரும் பம்பரமாய் சுழன்று புரொமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ஆண்ட்ரியா மட்டும் புரொமோஷன் என்றாலே வர மறுக்கிறார். பெயருக்கு சில ஆங்கில பத்திரிகைகளில் மட்டும் பேட்டி கொடுத்துவிட்டு ஒதுங்கி கொண்டுவிட்டார்.
இன்றைய சினிமா உலகில் ஒரு படத்தை எடுத்து முடிப்பதை விட அதை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது தான் பெரிய விஷயமாக உள்ளது. இதை தடுக்க தான் புரொமோஷன் போன்ற விஷயங்கள் உதவுகின்றன. ஆனால் அதற்கே ஆண்ட்ரியா வர மறுப்பதால் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஆண்ட்ரியா எண்ணி புலம்பி தவிக்கின்றனர்.
ஆண்ட்ரியா தொடர்ந்து இதுபோன்று நடந்து கொண்டால் அவருக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகளை வழங்க தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தயங்குவார்கள் என்பதே உண்மை.