14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
'பாகுபலி' படம் வந்து வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்த பிறகு தமிழ், தெலுங்குத் திரையுலகம் மீண்டும் இணைந்து பணியாற்ற ஆரம்பித்துவிட்டது. பல தமிழ், தெலுங்கு இரு மொழிப் படங்கள் உருவாக ஆரம்பித்ததோடு, இரு மொழிகளிலும் மாறி மாறி டப்பிங் செய்து வெளியிடப்படும் படங்களும் அதிகமாகியுள்ளது.
தெலுங்கு நடிகர்கள் பலருக்கும் தமிழில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அப்படி மகேஷ் பாபுவுக்கு வந்த ஆசைதான் 'ஸ்பைடர்' படம். தமிழ் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதால் படத்தை இரு மொழிகளிலும் தயாரிக்கலாம் என்ற முடிவுக்கு வந்து, படத்தை எடுத்து முடித்தும் விட்டார்கள். இறுதிக் கட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அடுத்த மாதம் படம் வெளியாகிறது.
இப்படத்தின் முதல் பார்வையும், மோஷன் போஸ்டரும் பெரும் வரவேற்பைப் பெற்றது. சயின்ஸ் பிக்ஷ்ன் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் 'பூம் பூம்' பாடல் கடந்த வாரம் வெளியாகி, தெலுங்கில் உடனடியாக சூப்பர் ஹிட்டாகிவிட்டது. தமிழில் இன்னும் பெரிய வரவேற்பை பெறவில்லை என்பதே உண்மை. மகேஷ் பாபுவை இன்னும் தெலுங்கு நடிகராகவே நமது தமிழ் ரசிகர்கள் பார்க்கிறார்கள். அதை நாளை வெளியாக உள்ள படத்தின் டீசர் மாற்றியாக வேண்டும். டீசரில் பொதுவாக வசனங்கள் இடம் பெறாது.
தெலுங்கில் நாளை யு டியூபிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியாகும் இந்த டீசர் முந்தைய சாதனைகளை முறியடித்து பெரிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழிலும் வெளியாகும் டீசரும் வரவேற்பைப் பெற்றால் அஜித், விஜய் படங்களைப் போல இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என்பது உறுதி. அது, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கையில்தான் உள்ளது. டிரைலர் வெளியிடும் போதாவது, மகேஷ் பாபு பேசும் தமிழ் வசனங்களை இடம் பெறச் செய்தால்தான் ரசிகர்களுக்கு தமிழ்ப் படம் பார்க்கப் போகிறோம் என்ற உணர்வு வரும்.