ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மராத்தியில் பிரபலமான இயக்குநர் நாகராஜ் மஞ்சுளே. இவர் அடுத்தப்படியாக பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்க உள்ளார். அதுவும் பாலிவுட்டின் பிக் பி யான அமிதாப் பச்சனை வைத்து இப்படத்தை இயக்க உள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒரு கதையை நாகராஜ் தயார் செய்து வந்தார். பின்னர் அந்த கதையை அமிதாப்பிடம் கூறியிருக்கிறார். அவருக்கும் கதை பிடித்து போக இப்போது இருவரும் இணைந்து படம் பண்ண தயாராகி வருகிறார்கள். அமிதாப் இந்தப்படத்தில் ஒரு குடும்ப தலைவராக நடிக்கிறார், சமூகத்தில் நடக்கும் இன்றைய விஷயங்களை உணர்வுப்பூர்வமாக சொல்லும் படமாக இந்தப்படம் உருவாக உள்ளது. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.