மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தமிழில் முதல் ரவுண்டில் சில படங்களில் நடித்து தோற்றுப்போன ரகுல் பிரீத் சிங், பின்னர் தெலுங்கிற்கு சென்று மார்க்கெட்டை பிடித்து விட்டார். அவர் நடித்த படங்கள் ஹிட்டடித்ததை அடுத்து இப்போது அங்கு முன்வரிசை நடிகையாகி விட்டார். அதோடு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள ஸ்பைடர் படத்தில் நடித்திருப்பவர், தற்போது கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதையடுத்து தமிழில் ரகுல் பிரீத் சிங்கின் மார்க்கெட் எகிறி விடும் என்பதால் சில முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் நடிக்கவும் அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.
முக்கியமாக, தெலுங்கில் சூர்யா நடிக்கும் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருவதால், தெலுங்கில் பிசியாக இருக்கும் ஒரு நடிகையை அவருக்கு ஜோடி சேர்த்தால் படத்தின் தெலுங்கு வியாபாரத்திற்கு பயனாக இருக்கும் என்று ரகுல் பிரீத் சிங்கிடம் பேசி வந்தவர்கள் இப்போது ஒப்பந்தம் செய்து விட்டனர்.