ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக நெடுந்தூரம் பயணிக்க வேண்டியவர் எஸ்.ஜே.சூர்யா. ஆனால் வாலி, குஷி என்ற இரண்டு ஹிட் படங்களை இயக்கிய பிறகு அவருக்கும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதனால் அதையடுத்து தன்னைத்தானே இயக்கிக்கொண்டு வந்த எஸ்.ஜே.சூர்யா, வேறு சில இயக்குனர்களின் படங்களிலும் நடித்தார். ஒருகட்டத்தில் அவரது மார்க்கெட் சரிந்து விட்டது.
இந்தநிலையில், தற்போது படம் இயக்குவதை ஓரங்கட்டிவைத்து விட்டு, முழுநேர நடிகராக உருவெடுத்துள்ள எஸ்.ஜே.சூர்யா, சில படங்களில் நாயகனாக நடித்துள்ள போதும், விஜய்யின் மெர்சல், மகேஷ்பாபுவின் ஸ்பைடர் ஆகிய மெகா படங்களில் அதிரடி வில்லனாக நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களிலுமே எஸ்.ஜே.சூர்யாவின் மிரட்டல் படுபயங்கரமான முறையில் படமக்கப்பட்டுள்ளதாம்.
அதனால் இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகும்போது அவரது வில்லன் மார்க்கெட் சூடுபிடித்து விடும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக, பிரகாஷ்ராஜின் வில்லன் மார்க்கெட் இறங்கியதை அடுத்து கோலிவுட்டில் சரியான வில்லன் இல்லாதநிலையில், அந்த இடத்தை எஸ்.ஜே.சூர்யாதான் பிடிப்பார் என்கிறார்கள்.