ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடித்த அசல் படத்தில் நடித்த பாலிவுட் நடிகை கொய்னா மித்ரா. அயன் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக எந்த வாய்ப்பும் இல்லாமல் மும்பையில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஒரு மர்ம நபர் கொய்னாவை போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி வந்துள்ளார். தான் தனிமையில் வசிப்பதாகவும் தன்னோடு வந்து தங்கினால் நிறைய பணம் தருவதாகவும் கூறியுள்ளார். அந்த டெலிபோன் நம்பரை பிளாக் செய்துள்ளார் கொய்னா.
அதன்பிறகும் வேறு வேறு எண்களில் இருந்து அந்த நபர் அழைத்து உள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கொய்னா, மும்பை ஒஷிவாரா போலீசில் புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொய்னா கொடுத்த தொலைபேசி எண்களை வைத்துக் கொண்டு மர்ம நபரை தேடிவருகிறார்கள்.