ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் திலீப் கைதாகி சிறை சென்றது என்னவோ நடிகை விவகாரத்தில் தான். ஆனால் இப்போது, இதுநாள் வரை திலீப் செய்துவந்த பல விதிமீறல் விஷயங்களை பலரும் புகார் பட்டியலாக அனுப்பி வருகின்றனர். அரசு தரப்பில் இருந்தும் அதன்மீதான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டு வருகின்றன.. அந்தவகையில் திலீப்புக்கு சொந்தமான 'டி சினிமாஸ்' திரையரங்கம் மீதான புகாரின் பேரில் அது விரைவில் மூடப்பட இருக்கிறது.
கேரளாவில் சாலக்குடியில் 'டி சினிமாஸ்' என்கிற மல்டிப்ளக்ஸ் தியேட்டர் காம்ப்ளக்ஸை சொந்தமாக வைத்துள்ளார் திலீப். ஆனால் இந்த தியேட்டர்களை கட்டுவதற்காக திலீப் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் சுமார் ஒரு ஏக்கரை ஆக்கிரமித்துள்ளார் என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. விசாரணையில் திலீப் அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்ததும், போலியான ஆதாரங்கள் தயார் செய்ததும் தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில் சாலக்குடி நகராட்சி, திலீப்பின் தியேட்டருக்கான லைசென்ஸை ரத்து செய்து, விரைவில் தியேட்டரை மூடும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இந்த வழக்கு விசாரணை முடிந்த பின்னரே, அதாவது வழக்கின் தீர்ப்பு ஒருவேளை திலீப்பிற்கு சாதகமாக வரும் பட்சத்தில் மீண்டும் தியேட்டர் செயல்படுவதற்கான லைசென்ஸ் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.