ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மும்பை : இந்திய சுதந்திர தினத்தை மட்டுமல்லாது பாகிஸ்தான் சுதந்திர தினத்தையும் சேர்த்து கொண்டாடுவோம் என்று பீகாரை சேர்ந்த பிரபல பாடகர் மிகா சிங் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
பாலிவுட்டின் பிரபல பாடகர் மிகா சிங். இவர், அமெரிக்காவின் சிகாகோ மற்றும் ஹூஸ்டன் நகரில் ஆகஸ்ட் 12 மற்றும் 13ம் தேதிகளில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், "வாருங்கள் என்னோடு இணைந்து இந்திய சுதந்திர தினம் மற்றும் நமது பாகிஸ்தான் சுதந்திர தினத்தையும் கொண்டாடுங்கள்" என்று கூறியிருக்கிறார்.
மிகா சிங்கின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் மிகா சிங்கை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. "எல்லையில் ஏராளமான இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்படுகின்றனர். இதற்கு காரணமான பாகிஸ்தான் நாட்டின சுதந்திர தினத்தை கொண்டாட சொல்வது கேவலமாக உள்ளது" மிகா சிங் என ஒருவர் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
எதிர்ப்பு : மிகா சிங்கின் இந்த கருத்திற்கு மகாராஷ்டிரா நவநிர்மாண் கட்சி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவில் ஹமாரா பாகிஸ்தான் பாடும் மிகா சிங், மகராஷ்டிராவில் இதை மைக் பிடித்து பாட முடியுமா, சவால் விடுகிறேன் என்று அக்கட்சியின் அமேயா கோப்கர் கூறியுள்ளார்.