ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழகத்தில் விவசாய தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நடிகர் தனுஷ் 125 விவசாய குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கியுள்ளார்.
பருவமழை பொய்ததால் தமிழகத்தில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தற்கொலை செய்த சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறின. இதுதொடர்பாக டில்லியில் தமிழக விவசாயிகள் பல்வேறு விதமான ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். விவசாயிகளின் துயர் கண்டு சினிமா பிரபலங்கள் அவ்வப்போது உதவி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் தனுஷ், தேனி மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள தன் குலதெய்வம் கோவிலுக்கு மனைவி ஐஸ்வர்யா மற்றும் பெற்றோருடன் சென்று வழிபட்டார். பின்னர் தமிழகம் முழுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட 125 விவசாய குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி அளித்தார். தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் இந்த நிதியுதவியை வழங்கினார்.
கொலை விளையும் நிலம் என்ற குறும்படத்தை பார்த்த தனுஷ் விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் இயக்குநர் சுப்ரமணிய சிவா, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் மற்றும் தனுஷின் ரசிகர்கள் மன்றம் உதவியோடு ஒரு குழு அமைத்து, விவசாயிகளின் நிலையை ஆய்வு செய்து இந்த உதவி தொகையை வழங்கியிருக்கிறார் தனுஷ்.