ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில், பெப்சி சார்பில் அது வேலை நிறுத்த போராட்டமாக மாறி இரண்டாவது நாளாக ஸ்டிரைக் நீடித்து வருகிறது. இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த்தை பெப்சி நிர்வாகிகள் சந்தித்து பேசினர். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண சொல்லி ரஜினி அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், ரஜினி சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் கூறியிருப்பதாவது... எனக்கு பிடிக்காத சில சொற்களில் வேலை நிறுத்தம் என்கிற ஒன்று. எந்த பிரச்னையாக இருந்தாலும் சுய கவுரவம் பார்க்காமல் பொதுநலத்தை மட்டும் கருதி அன்பான வார்த்தைகளிலே பேசி தீர்வு காணலாம். தயாரிப்பாளர் சங்கமும், பெப்சியும் பேசி கூடிய சீக்கிரம் சுமூகமான தீர்வு காண வேண்டுமென்று மூத்த கலைஞன் என்ற முறையில் கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.