14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
நடிகை கஸ்தூரி அவ்வப்போது அரசியல் கருத்துக்களை கூறி தன்னை லைம் லைட்டிலேயே வைத்துக் கொண்டிருக்கிறார். ரஜினி அரசியலுக்கு வருவதை கடுமயாக விமர்சனம் செய்தவர். ரஜினி ரசிகர்களின் கடும் எதிர்ப்புக்கு பிறகு ரஜினியை சந்தித்து அப்படியே அந்தர் பல்டி அடித்தார். இப்போது ரேஷன் பொருட்கள், கேஸ் மானியம் குறித்த அரசின் அறிவிப்புகளை கிண்டல் செய்திருக்கிறார்.
நேற்று அவர் தனது டுவிட்டரில் ''ஏழை நடுத்தர மக்களை பாதிக்கும் கியாஸ் மானியம் ரத்துக்கு பதிலாக எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் இலவச விமான பயணம், இலவச வீடு, இலவச ஊழியர்கள் போன்ற சலுகைகளை ஏன் ரத்து செய்யக்கூடாது?'' என்று கேட்டுள்ளார் இன்னொரு பதிவில் கவிதை எழுதியுள்ளார். அது வருமாறு.
ரேஷன் கட்டு,
கியாஸ் கட்டு,
பவர் கட்டு,
தண்ணீர் கட்டு
மக்களை கட்டு கட்டா கட்டிப்புட்டு
மந்திரிங்க கட்டு கட்டா கட்டுறாங்க.
விளங்கும். இம்சை அரசன்.
என்று குறிப்பிட்டு உள்ளார்.
தனது இன்னொரு பதிவில் அப்துல் கலாம் பற்றி இப்படி குறிப்பிட்டிருக்கிறார்.
அப்துல் கலாமை வைத்து
அரசியல் ஆதாயம் தேடும்
அசிங்கத்தை எங்கு சொல்ல?
அக்கினிச்சிறகுகளை விரித்து
பறக்கவில்லை என்றாலும்
அருந்தவப்புதல்வனின் கனவை
எரிக்க முயல்வதுண்டோ!?
தரணியெங்கும் தலைவணங்கும்
தன்னிகரற்ற தலைவனுக்கு
தமிழரால் தலைகுனிவு தகுமோ!
காவிக்கும் பச்சைக்கும் இடைப்பட்டு
காண்பீரே கொடிக்காட்டும் வழி
பிள்ளை உள்ளம் படைத்தச்செம்மல்
வெள்ளையன்றோ அவர் வாழ்க்கை.
கஸ்தூரியின் கமெண்டுகளால் கடுப்பாகி இருக்கிறது ஆளும் தரப்பு.