14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
இந்தியத் திரையுலக வரலாற்றில் ஒரு படத்திற்காக நான்கு வருட காலம் வேறு எந்தப் படத்திலும் நடிக்காமல் வேறு எந்த நடிகராவது இருந்திருப்பாரா என்பது சந்தேகம் தான். 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களுக்காகவும் மொத்தமாக நான்கு வருட காலத்தை தன் திரையுலக வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தவர் பிரபாஸ். தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தாலும் 'பாகுபலி' படத்தின் மீது நம்பிக்கை வைத்து இரண்டு கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து நல்ல பெயரையும் பெற்றார் பிரபாஸ்.
மீண்டும் அப்படி ஒரு நான்கு வருட காலம் ஒரு படத்திற்காக விட்டுக் கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு வெளிப்படையாக பதிலளித்துள்ளார். “நான்கு வருடம் என்பது நீண்ட காலம். ஒரு நடிகரின் திரையுலகப் பயணத்தில் அது மதிப்புமிக்கது. பாகுபலி படத்திற்காக நான்கு வருட காலம் செலவிட்டது எனக்கு பலவற்றைக் கற்றுக் கொடுத்துள்ளது. மீண்டும் ஒரு படத்திற்காக நான்கு வருடம் செலவிடுவது என்பது மிகவும் நீண்டது. ஆனாலும், ஒரு கதை என்னை ஆச்சரியப்படுத்தினால் அதற்காக இரண்டு வருடங்கள் வேண்டுமானால் செலவிடுவேன்,” எனக் கூறியுள்ளார்.
பிரபாஸ் தற்போது 'சாஹோ' படப்பிடிப்பிற்கான அவருடைய தோற்றத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.