ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கந்து வட்டி தொழிலில் ஈடுபட்டு, சினிமா பிரபலங்கள் உட்பட பலரை ஆட்டிப்படைத்த பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சென்னை, சவுகார்பேட்டையில், பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்த முகுந்த் சந்த் போத்ரா. இவரிடம், சினிமா தயாரிப்பாளர்கள் உட்பட பலர் கடன் பெற்று, கந்து வட்டியால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் கோர்ட் வரை படியேறி சென்றவர்கள் ஏராளம். பலர் எடுத்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் கூட போனது. நடிகர் ரஜினியின் சம்மந்தியும், தனுஷின் தந்தையுமான கஸ்துாரிராஜா உள்பட, பல சினிமா பிரபலங்களை இவர் ஆட்டிப்படைத்து உள்ளார்.
இந்நிலையில் தி.நகரை சேர்ந்தவர், செந்தில் க.கணபதி என்பவர், தன் ஓட்டல் தொழிலை விரிவுப்படுத்த, 83.50 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். இதுவரை, பல தவணைகளில், பல லட்சம் ரூபாயை வட்டியாக செலுத்தி வந்துள்ளார். ஆனால், முகுந்த் சந்த் போத்ராவும், அவரது மகன்களும், பத்து நாளைக்கு ஒருமுறை கூட்டு வட்டியாக சேர்த்து, 4.24 கோடி ரூபாய் தர வேண்டும் என, மிரட்டி உள்ளனர்.
இவர் அளித்த புகாரின் பேரில் முகுந்த் சந்த் போத்ரா மற்றும் அவரது மகன்கள் இருவரும் கடந்த ஜூலை 25-ம் தேதி கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து போத்ரா மீது ஏகப்பட்ட கந்து வட்டி புகார்கள் குவிந்தன. இதையடுத்து போத்ரா மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
போத்ரா மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதால் இனி அவரால் குறைந்தது ஓராண்டுக்கு ஜாமினில் கூட வெளிவர முடியாது.