சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
சிலந்தி படத்தை இயக்கிய ஆதிராஜன் இயக்கும் படம் அருவா சண்ட. ஒயிட் ஸ்கிரீன் நிறுவனத்தின் சார்பில் பிரபல கபடி வீரர் வி.ராஜா தயாரித்து, ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மாளவிகாக மேனன் நடிக்கிறார். இவர்கள் தவிர சரண்யா, ஆடுகளம் நரேன், சுஜாதா, சிங்கமுத்து, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இதன் படப்பிடிப்புகள் சென்னை புறநகரில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ஹீரோ ராஜாவும், வில்லன் சவுந்தர்ராஜாவும் அரிவாளால் மோதிக் கொள்ளும் காட்சி ஒரு தென்னந்தோப்பில் நடந்தது. தளபதி தினேஷ் சண்டை காட்சிகளை இயக்கினார். இதில் எதிர்பாராத விதமாக சௌந்தர்ராஜா வீசிய அரிவாள், ராஜாவின் தாடையில் வெட்டியது. அதில் பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியது. படக்குழுவினர் பதட்டத்துடன் ஓடிச் சென்று ஐஸ்கட்டி வைத்து முதலுதவி செய்தனர். பின்பு ராஜாவை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். அதன் பின்னரும் இருவரும் மோதும் சண்டைக்காட்சி எடுத்து முடிக்கப்பட்டது. இதனால் படப்பிடிப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து இயக்குனர் ஆதிராஜன் கூறும்போது... "இது முழுக்க முழுக்க அரிவாள் பயன்படுத்தி எடுக்கப்படும் சண்டை காட்சி. நிஜ அரிவாள் தான் பயன்படுத்தப்பட்டது. இதனால் டூப் வைத்து காட்சியை எடுக்க நினைத்தோம். ஆனால் ஹீரோ அதற்கு மறுத்துவிட்டார். எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஒரு சின்ன டைமிங் மிஸ்ஸானதால் இது நடந்து விட்டது. இன்னும் இதைவிட கடுமையான சண்டை காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. இதனால் ஒரு மருத்துவரை படப்பிடிப்பில் தயாராக வைத்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறோம்" என்றார்.