பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடித்துள்ள படம் ஸ்பைடர். சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங் நாயகியாக நடிக்க, டைரக்டர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்திருக்கிறார். அந்தவகையில், மகேஷ்பாபு-எஸ்.ஜே.சூர்யா இருவரும் எதிரும் புதிருமாக மோதிக்கொள்ளும் காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறாராம் முருகதாஸ்.
முக்கியமாக, இந்த படத்தில் மகேஷ்பாபு, எஸ்.ஜே.சூர்யா இடையே ஒரு 8 நிமிட காட்சி படத்தில் உள்ளதாம். இந்த காட்சிதான் படத்தில் பெரிய டுவிஸ்டாக அமைந்திருக்கிறதாம். அதனால் இந்த ஒரு காட்சிக்காக மட்டுமே ரூ. 20 கோடி செலவு செய்து படமாக்கியிருக்கிறாராம் முருகதாஸ். இந்த காட்சியில் தற்போது கிராபிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறதாம்.