ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி தினமும் எதையாவது ஒன்றைப் பேச வைத்துக் கொண்டிருக்கிறது. சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களுக்கு அரசியல், சினிமா, விளையாட்டு, சர்ச்சை என ஏதாவது ஒன்று அடிக்கடி 'மெல்லுவதற்கு' வேண்டும்.
ஆனால், சமீப காலமாக அந்த இடத்தை 'பிக் பாஸ்' பிடித்துக் கொண்டுவிட்டது. இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் பொறுப்பில்லாதவர்கள் என்று மறுபக்கம் சிலர் வாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். பொழுது போக்கு என்பதையும் மீறி மக்களின் நேரத்தில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி அதிகம் எடுத்துக் கொள்கிறது என்று புலம்புபவர்களும் அதிகம்.
ஓவியா என்ற ஒரே ஒரு நடிகையால் அதிகம் பரபரப்பாக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த வாரத்தில் ஓவியாவின் புகழைக் குறைக்க திட்டமிட்டு மாற்றி வருகிறார்கள் என்றும் ஓவியவின் ரசிகர்களால் குற்றம் சுமத்தப்பட்டது. நேற்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அனைத்து போட்டியாளர்களிடமும் பல கேள்விகளை எழுப்பி அவர்களது தவறுகளை சுட்டிக் காட்டினார். அதிலும் பாரபட்சம் காட்டப்படுவதாக நேற்றே சர்ச்சை எழுந்தது.
'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ஆரம்பத்திலேயே ஸ்ரீ, பரணி அவர்களாக வெளியேறியதால் அந்த இரண்டு போட்டியாளர்களுக்குப் பதிலாக வேறு யாரையும் மாற்றாக நுழைக்காமல் இருந்தார்கள். ஆனால், இன்று 'பிக் பாஸ்' வீட்டில் புதிய போட்டியாளர் ஒருவர் நுழைய உள்ளார் என்று அறிவிக்கப்பட்டு புரோமோவும் வெளியாகிவிட்டது. சமூக வலைத்தளங்களில் அது நடிகை பிந்து மாதவி என பலரும் கூறி வருகிறார்கள்.
புதிதாக வரும் இந்த பிரபலம், பிக் பாஸ் வீட்டில் 'பிராப்ளம்' ஆக இருப்பாரா, பிரபலமாகவே இருக்கப் போகிறாரா என்ற கேள்வியையும் கமல்ஹாசனே கூறிவிட்டார்.
14 பேர் என்றார்கள், கடைசியில் 15 பேர் என நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள். இப்போது 16வதாக ஒருவர் புதிதாக நுழைகிறார். 100 நாட்கள் முடிவதற்குள் என்னவெல்லாம் மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறார்களோ...?.