ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திரையுலகத்தில் ஒரு நடிகையின் நடிப்பை மற்றொரு நடிகை பாராட்டுவது என்பதெல்லாம் அபூர்வமாக நடந்த விஷயங்களாக ஒரு காலத்தில் இருந்தது. ஆனால், இந்தக் காலத்தில் அனைவரும் பொறாமை எதுவும் இல்லாமல் ஒற்றுமையாகவே இருக்கிறார்கள். ஒருவர் நடிப்பு போல மற்றொருவர் நடிப்பும் வராது, ஒருவர் ஸ்டைல் போல மற்றொருவர் ஸ்டைலும் வராது.
தெலுங்குத் திரையுலகில் 'பிடா' படம் மூல புதிய புயலை ஏற்படுத்தியுள்ள சாய் பல்லவிக்கு தெலுங்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பைக் கொடுத்துவிட்டார்கள். மலையலாளத்தை அடுத்து தெலுங்கிலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்திவிட்டார் சாய் பல்லவி.
'பிடா' படம் ஒரு வாரத்திலேயே 40 கோடிக்கும் அதிகமாக வசூலித்து 25 கோடி வரை பங்குத் தொகையாகவும் பெற்று கொடுத்துவிட்டது என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் மீண்டும் ஒரு சிறிய படத்திற்கு மெகா வெற்றி கிடைத்துள்ளது.
சமீபத்தில் 'பிடா' படத்தைப் பார்த்த தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகையான சமந்தா, சாய் பல்லவியைப் பெரிதும் பாராட்டியுள்ளார். “ஃபிடா' படம் மிகவும் புத்துணர்வைத் தருகிறது. அற்புதம் சேகர் கம்முலா, உண்மையான காதல், குழுவினருக்கு எனது பாராட்டுக்கள். பிடாவில் சாய் பல்லவிதான் எல்லாமும், அதற்கு மேலும். இனி, ஒரு படத்தில் சாய் பல்லவி இருக்கிறார் என்றால் போய்ப் பார்க்கலாம். அருமையான நடிப்பு, வாழ்த்துகள்,” எனப் பாராட்டியுள்ளார் சமந்தா.