ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சினிமாவில் நல்ல நடிகன் என்கிற ஒரு அங்கீகாரத்திற்காக 12 வருடங்கள் போராடியிருக்கிறேன் என்கிறார் பிரேம். விக்ரம் வேதா படத்தில் மாதவன், விஜய்சேதுபதிக்கு அடுத்ததாக சைமன் என்ற போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்து கவனம் பெற்றிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
நடிப்புதான் என் உலகம். சினிமாதான் என் லட்சியம். சினிமா வாய்ப்பு எளிதில் கிடைக்காததால் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தேன். அது எனக்கொரு அடையாளத்தை கொடுத்தது. இனிமேல் சினிமா மட்டும்தான் என்று 12 வருடங்களுக்கு முன்பு சின்னத்திரையிலிருந்து விலகி வந்தேன். மிகப்பெரிய போராட்டம் சினிமாவில். சின்னத்திரை நடிகன், ஹீரோவை விட உயரமாக இருக்கிறான் என பல விமர்சனங்கள், புறக்கணிப்புகள் எல்லாவற்றையும் தாண்டி 30 படங்களுக்கு மேல் நடித்தேன்.
நேபாளி, பிரியாணி, புலிவால், 36 வயதினிலே, சி 3, தமிழ் செல்வனும், தனியார் அஞ்சலும் போன்ற படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்தேன். கண்ணம்மா, தனம் போன்ற படங்களில் ஹீரோவா நடித்தேன். ஆனாலும் எனக்கு தனித்த அங்கீகாரம் கிடைக்கவில்லை.12 வருட போராட்டத்துக்கு பிறகு விக்ரம் வேதாவில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
நான் பெரும்பாலும் போலீஸ் கேரக்டரில்தான் நடித்திருக்கிறேன். இதனால் ஒரு கட்டத்தில் போலீஸ் கேரக்டரே வேண்டாம் என்ற முடிவு செய்திருந்தபோது விக்ரம் வேதாவில் நடிக்க அழைப்பு வந்தது. இதிலும் போலீஸ் வேடம்தான் என்றதும் நடிக்க தயங்கினேன். அதன் பிறகுதான் யூனிபார்ம் போடவேண்டாம். தாடி வச்சிக்கலாம். என்றார்கள் கூடவே மொட்டையும் அடிக்கச் சொன்னார்கள். வித்தியாசமாக இருக்கிறதே என்று நடித்தேன். அதுவே வெற்றியையும் கொடுத்திருக்கிறது. அடுத்து சசிகுமாருடன் கொடி வீரன் படத்தில் நடித்து வருகிறேன். இனி என் கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பேன். என்றார் பிரேம்.