பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
வழக்கு எண் 18/9 படத்திற்கு பிறகு பாலாஜி சக்திவேல் ரா ரா ராஜசேகர் என்ற படத்தை இயக்கினார். இதனை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் லிங்குசாமி தயாரித்தார். சிறிய பட்ஜெட் படம்தான் என்றாலும் அதையும் வெளியிட முடியாமல் தவித்து வருகிறார் லிங்குசாமி. ரா ரா ராஜசேகர் படத்தை முடித்துக் கொடுத்து விட்டு அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார் பாலாஜி சக்திவேல்.
அடுத்து அவர் இயக்கும் படத்தின் பெயர் யார் இவர்கள்?. இதனை சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரிக்கிறார். புதுமுகங்கள் இசக்கி கிஷோர், அஜய் என்ற புதுமுகங்கள் ஹீரோக்களாக நடிக்கிறார்கள் சுபிக்ஷா, அபிராமி ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இவர்கள் தவிர பாண்டியன், ராம், விஜயன், பத்ரி, உள்பட பலர் நடிக்கிறார்கள். அனைவரும் புதுமுகங்கள். எங்கேயும் எப்போதும் வினோதினி சமூக ஆர்வலராக முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
எஸ்.டி.விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார், ஜாவித் ரியாஸ் இசை அமைக்கிறார். கொலை செய்கிற அளவிற்கு ஒருவன் கோப்படுவான் ஆனால் கொலை செய்ய மாட்டான். ஒருவன் கோபமே படமாட்டான் ஆனால் கொலை செய்வான். இப்படி இரு துருவங்களாக இருப்பவர்கள் சந்தித்துக் கொள்ளும்போது என்ன நடக்கும் என்பதுதான் கதையாம். பாலாஜி சக்திவேல் இயக்கும் முதல் விறுவிறு ஆக்ஷன் படம். படப்பிடிப்புகள் சென்னையில் நடக்கிறது.