ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வழக்கு எண் 18/9 படத்திற்கு பிறகு பாலாஜி சக்திவேல் ரா ரா ராஜசேகர் என்ற படத்தை இயக்கினார். இதனை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் லிங்குசாமி தயாரித்தார். சிறிய பட்ஜெட் படம்தான் என்றாலும் அதையும் வெளியிட முடியாமல் தவித்து வருகிறார் லிங்குசாமி. ரா ரா ராஜசேகர் படத்தை முடித்துக் கொடுத்து விட்டு அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார் பாலாஜி சக்திவேல்.
அடுத்து அவர் இயக்கும் படத்தின் பெயர் யார் இவர்கள்?. இதனை சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரிக்கிறார். புதுமுகங்கள் இசக்கி கிஷோர், அஜய் என்ற புதுமுகங்கள் ஹீரோக்களாக நடிக்கிறார்கள் சுபிக்ஷா, அபிராமி ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இவர்கள் தவிர பாண்டியன், ராம், விஜயன், பத்ரி, உள்பட பலர் நடிக்கிறார்கள். அனைவரும் புதுமுகங்கள். எங்கேயும் எப்போதும் வினோதினி சமூக ஆர்வலராக முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
எஸ்.டி.விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார், ஜாவித் ரியாஸ் இசை அமைக்கிறார். கொலை செய்கிற அளவிற்கு ஒருவன் கோப்படுவான் ஆனால் கொலை செய்ய மாட்டான். ஒருவன் கோபமே படமாட்டான் ஆனால் கொலை செய்வான். இப்படி இரு துருவங்களாக இருப்பவர்கள் சந்தித்துக் கொள்ளும்போது என்ன நடக்கும் என்பதுதான் கதையாம். பாலாஜி சக்திவேல் இயக்கும் முதல் விறுவிறு ஆக்ஷன் படம். படப்பிடிப்புகள் சென்னையில் நடக்கிறது.