ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2006ம் ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் படம் அபோகலிப்டோ. மெல்கிப்சன் இயக்கிய இந்தப் படம் நாகரீகம் வளராத காலத்தில் மனிதர்களை பலியிடும் ஒரு கொடூர மந்திரவாதியின் பிடியிலிருந்து தன் கிராம மக்களை காப்பாற்றும் ஒரு இளைஞனின் கதை. பல்வேறு விருதுகளை குவித்த படம். இந்த படத்தின் சாயலில் தற்போது தமிழில் ஆறாம் வேற்றுமை என்ற படம் தயாராகி வருகிறது. செவன்ந்த் சென்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் சக்திவேல் தயாரிக்கும் இந்தப் படத்தை ஹரிகிருஷ்ணா இயக்குகிறார்.
அஜய், கோபிகா என்ற புதுமுகங்களுடன் யோகி பாபு, உமாஸ்ரீ, அழகு, சூர்யகாந்த், சேரன்ராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள் கணேஷ் ராகவேந்திரா இசை அமைக்கிறார். அறிவழகன் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றிய இயக்குனர் ஹரிகிருஷ்ணா கூறியதாவது:
இந்தப்படம் சுமார் 900 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆதிவாசிகள் பற்றிய படம் . ஆறாவது அறிவில் வேறுபட்டு வாழும் மனிதர்களைப் பற்றி கதை நகர்வதால் ஆறாம் வேற்றுமை என பெயர் வைத்தோம். தங்களுக்கு என்று பெயரும் மொழியும் இல்லாமல் வாழும் இனம். நமக்கு அறிமுகமான மொழியே இல்லை இந்த படத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. ஓர் இடம், ஓர் இனம், ஓர் வாழ்க்கை என வாழத் தெரியாமல் வாழ்ந்த ஆதிவாசிகளைப் பற்றிய படமே இந்த ஆறாம் வேற்றுமை.
மூன்று மலைகளில் வாழும் மூன்று விதமான மக்களைப் பற்றிய படம், ஆறு அறிவு கொண்ட மனிதன் சிந்திக்கிறான். நாகரிக வாழ்க்கையை வாழ்கிறான். அதே ஆறு அறிவு கொண்ட மனிதன் தான் காட்டுவாசிகளாகவும் வாழ்கிறான். இன்றைய அறிவியல் வளர்ச்சி எதுவும் இல்லாத காட்டுப் பகுதியை தேடிப்பிடித்தோம். பல கிலோ மீட்டர்கள் நடந்தே போக வேண்டி இருந்தது. எல்லோருமே எங்களது முயற்சியையும் கதை பற்றிய நம்பிக்கையையும் மனதில் கொண்டு எல்லா சிரமங்களையும் பொருத்துக் கொண்டார்கள். முழு படப்பிடிப்பும் தர்மபுரி சேலம் அரூர் அதிராம்பள்ளி போன்ற இடங்களில் உள்ள காடுகளில் நடைபெற்றுள்ளது.
ஹாலிவுட்டில் தயாராகி மாபெரும் வெற்றி பெற்ற அபோகலிப்டோ போன்ற படம் தான் இந்த ஆறாம் வேற்றுமை என்றார் இயக்குனர் ஹரிகிருஷ்ணா.