ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கியுள்ள படம் சதுரஅடி 3500. அறிமுக நாயகன் நிகில் மோகன், ரகுமான், ஆகாஷ், இனியா, கோவை சரளா, எம்எஸ் பாஸ்கர், மனோபாலா, தலைவாசல் விஜய், பிரதாப் போத்தன், மேக்னா முகேஷ் நடிக்கும் இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது.
இவ்விழாவில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு படத்தின் இசை மற்றும் டிரைலரை வெளியிட, இயக்குனர் கே பாக்யராஜ் பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் ஹீரோயின் இனியா, ரகுமான் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இதை கண்டித்து பலரும் பேசினார்கள். இது தொடர்பாக கே.பாக்யராஜ் பேசியதாவது:
இப்படத்தில் ஒரேயொரு பாடலுக்கு நடனமாடிய நடிகை மேக்னா முகேஷ் இங்கு வருகைத் தந்திருக்கிறார். அவருக்கு நான் நன்றி சொல்கிறேன். ஆனால் ஹீரோயின் வரவில்லை. அவர் வராததால் நஷ்டம் அவருக்கு தான் ஒழிய படக்குழுவிற்கு இல்லை. 'சுவர் இல்லாத சித்திரங்கள் ' படத்தில் நான் ஒரு வசனம் எழுதியிருப்பேன். 'கண்ணடிச்சு கூப்பிட்டும் வராத பொம்பளை கைய பிடிச்சு இழுத்தா மட்டும் வந்துடவா போவுது..' என்று அவர்களுக்கு தான் இங்கு வர வேண்டிய பொறுப்பு இருக்க வேண்டும். அவர்கள் வராத விசயம் பெரிய பிரச்சனையாக மாறிவிட்டதால் இனி அவர் எல்லா விழாக்களிலும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கிறேன்.
எல்லா தியேட்டர்களிலும் எப்போதும் ஏதேனும் ஒரு சிறிய படங்கள் ஓடிக் கொண்டிருக்க வேண்டும் என்று ஒரு சட்டத்தை ஏன் போடக்கூடாது. எப்போது பார்த்தாலும் பெரிய ஆர்ட்டிஸ்ட் படம் தான் ஒட வேண்டும் என்று எந்த நியதியும் இல்லையே? ஒவ்வொரு தியேட்டரிலும் சிறிய படங்களுக்கு காட்சிகளை ஒதுக்க வேண்டும். அதற்காக காலை காட்சியை ஒதுக்கக் கூடாது.
பெரிய நடிகர்கள் நடித்திருந்தால் அந்த படத்தை காண ரசிகர்கள் காலை காட்சிக்கு வருவார்கள். ஆனால் புதுமுகங்கள் நடித்திருக்கும் சின்ன படங்களுக்கு ரசிகர்கள் வரமாட்டார்கள். இதை காரணமாக காட்டி தியேட்டரிலிருந்து படத்தை தூக்கிவிடுகிறார்கள்.
படம் பார்த்த ரசிகர்களின் மவுத் டாக் பரவுவதற்குள் படத்தை தூக்கிவிட்டால் சின்ன படங்கள் எப்படி ஒடும்? அதனால் சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். கண்டிப்பாக ஏதேனும் ஒரு சின்ன படங்கள் தியேட்டரில் ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும் என்பது போல் ஒரு நடைமுறையை உருவாக்க வேண்டும். அதேப்போல் ஏசி வசதி, பார்க்கிங் வசதி போன்ற எல்லா வசதிகளும் கொண்ட நல்ல தியேட்டர்களும் சின்ன படங்களை திரையிட முன்வர வேண்டும்.
இவ்வாறு கே.பாக்யராஜ் பேசினார்.