பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
போதை பொருள் சப்ளை மற்றும் பயன்பாடு குறித்த வழக்கில் நடிகை சார்மி, சிறப்பு புலனாய்வு குழு முன் இன்று ஆஜரானார். போதை பொருள் விவகாரத்தின் முக்கிய குற்றவாளியுடன் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டது, வாட்ஸ் ஆப் மூலம் 1,000 தகவல்களை பரிமாற்றம் செய்து கொண்டது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
முக்கிய குற்றவாளி கால்வின்
தெலுங்கு திரைப்பட உலகை போதை பொருள் விவகாரம் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி கால்வினுடன் தொடர்புடைய திரையுலக பிரமுகர்களுக்கு தெலுங்கானா கலால் துறையின் அமலாக்க பிரிவின் கீழ் செயல்படும் சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பி உள்ளது. இதுவரை, ஏழு பேர் அந்த குழு முன் ஆஜராகி உள்ளனர்.
நடிகை சார்மிக்கு அதுபோல் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின் போது தன்னிடம் வலுக்கட்டாயமாக, ரத்தம், முடி, நகம் மாதிரிகளை எடுக்க கூடாது; விசாரணையின் போது பெண் போலீசார் உடன் இருக்க வேண்டும்; தனது வழக்கறிஞர் உடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என சார்மி கோரி இருந்தார். ஆனால், வழக்கறிஞர் உடன் இருக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. பெண் போலீசார் உடன் இருக்க அனுமதித்தது. அதேபோல், சார்மியின் சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே ரத்தம் உள்ளிட்ட மாதிரிகளை கேட்டு பெற வேண்டும் என கூறியிருந்தது.
உடன் வந்த பாதுகாவலர்கள்
அதன்படி, நடிகை சார்மி சிறப்பு புலனாய்வு குழு முன் இன்று காலை ஆஜரானார். ஐதராபாத்தில் உள்ள அப்காரி பவன் கட்டடத்தில் இருந்த குழு முன், ஆஜராக வந்த சார்மியுடன் அவரது பாதுகாவலர்கள், வழக்கறிஞர்கள் வந்தனர். ஆனால், அவர்களை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. முக்கிய குற்றவாளி கால்வின், தனது மொபைல் போனில், சார்மியின் மொபைல் போன் எண்ணை, சார்மிடா என்ற பெயரில் பதிவு செய்து வைத்து இருந்தார்.
சார்மி சிக்கல்
சார்மி நடித்த ஜோதிலட்சுமி என்ற படம் ரிலீஸான போது நடந்த விழாவில் கால்வினும், சார்மியும் செல்பி போட்டோ எடுத்து கொண்டு இருந்தனர் என்பது தெரிய வந்தது. இரண்டு பேரும் வாட்ஸ் ஆப் மூலம், 1,000க்கும் மேற்பட்ட தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளனர். எனவே, இந்த விஷயங்கள் சார்மிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.
காலை, 10 மணிக்கு சிறப்பு புலனாய்வு குழு முன் ஆஜரான சார்மி, மாலை புறப்பட்டு சென்றார். இயக்குனர் புரி ஜெகன்னாத் இயக்கி வரும் பைசா வசூல் படப்பிடிப்பில் பங்கேற்றார். போதை பொருள் விவகாரம் தொடர்பாக, புரி ஜெகன்னாதிடமும் சிறப்பு புலனாய்வு குழு சில நாட்களுக்கு முன் விசாரணை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.