ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகம் தற்போது பல சிக்கல்களில் சிக்கிக் கொண்டிருக்கிறது என தாராளமாகச் சொல்லலாம். திருட்டு விசிடி, திருட்டு இணையதளம் ஆகியவை மட்டுமே கடந்த காலங்களில் திரையுலகத்தை அதிகம் பாதித்த விஷயங்கள். ஆனால், சமீப காலமாக புதிது புதுதாக சில விஷயங்கள் வர ஆரம்பித்துள்ளன. ஜிஎஸ்டி வரியினால் அதிகபட்சமாக சுமார் 30 ரூபாய் வரை டிக்கெட் விலை உயர்ந்தது.
கேளிக்கை வரி குறித்த அரசு மற்றும் திரையுலகத்தினரிடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எந்த பலனும் ஏற்படவில்லை என்றே தெரிகிறது. இதனால், வரும் காலங்களில் அரசு கேளிக்கை வரி விதித்தால் அதை எதிர்த்து போராட வேண்டிய சூழ்நிலை திரையுலகத்தினருக்கு உருவாகலாம். அரசு எப்போது கேளிக்கை வரி குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று திரையுலகத்தினர் காத்திருக்கிறார்கள். அப்படி வந்தால் அதை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதும் கேள்விதான். முன்பைப் போல தியேட்டர்களை மூடினால் மக்களின் ஆதரவு கிடைக்காது.
இப்போது படங்களுக்கு சென்சார் வாங்குவதிலும் புதிய நடைமுறை வந்துள்ளது. அதனால் எந்தப் படம் எப்போது வெளியாகும் என்பது பற்றி தயாரிப்பாளர்களே முடிவெடுக்க முடியாத நிலை வந்துள்ளது. விண்ணப்பங்களின் அடிப்படையில்தான் படங்களைப் பார்க்க ஆரம்பிக்கிறார்களாம். அதனால், 'விவேகம்' உள்ளிட்ட சில படங்கள் மேலும் தள்ளிப் போகலாம் என்கிறார்கள்.
நேற்று முதல் புதிதாக வேறு ஒரு சிக்கலும் வந்துள்ளது. பெப்சி மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினருக்கிடையே மோதல் உருவாக வாய்ப்புகள் உள்ளன. தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவிற்கு பெப்சி தரப்பில் கண்டிப்பாக எதிர்ப்புகள் எழும்.
இவ்வளவையும் கடந்து ஒரு படம் மக்களிடம் சென்று சேர வேண்டுமானால் தயாரிப்பாளர்களின் நிலையை யோசித்துப் பாருங்கள்.