ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் ராமின் அடுத்த படைப்பாக வெளியாக இருக்கிறது 'தரமணி'. உலகமயமாக்கல் ஆண், பெண் உறவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது தான் தரமணி படத்தின் கதைக்களம். இதுவும் ஒரு அக்மார்க் காதல் கதை தானாம். ஆனால் மற்ற படங்களில் எல்லாம் ஒரு ஆண் தனது பாய்ன்ட் ஆப் வியூவில் இருந்து தனது காதல் கதையை விவரிப்பது தான் வழக்கம். ஆனால் இந்தப்படத்தில் ஆண்ட்ரியாவின் பார்வையில் இருந்து அவரது காதல் கதை விரிகிறதாம். தமிழில் இந்த யுத்தியை பயன்படுத்துவது அனேகமாக இது தான் முதன்முறையாக இருக்கும்..
இதேபோல மூன்று வருடங்களுக்கு முன் மலையாளத்தில் 'ஓம் சாந்தி ஒசானா' என்கிற படம் வெளியானது. நிவின்பாலி-நஸ்ரியா ஜோடியாக நடித்திருந்த இந்தப்படம் நஸ்ரியாவின் பாயின்ட் ஆப் வியூவில் கதை நகர்வதாக சொல்லப்பட்டிருந்தது. அதிலும் ஒரு ஆச்சர்யமாக, நிவின்பாலியின் காதலை பெறுவதற்காக படம் முழுவதும் அவர் செய்யும் பிரயத்தனமும் அதை அவரே கதைபோல சொல்வதும் தான் படத்தின் ஹைலைட். மலையாளத்திலும் இந்த யுத்தி நஸ்ரியாவுக்குத்தான் முதன்முதலாக ஒர்க் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.