ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹீரோக்களுக்கு இணையாக தற்போது சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பவர் நயன்தாரா தான். இன்றைய தேதியில் 4 கோடி சம்பளம் வாங்கும் நயன்தாரா, இனி நடிக்கவிருக்கும் படங்களுக்கு 5 கோடி கேட்க இருப்பதாக தகவல்.
இதற்கிடையில் தனி நாயகியாக நயன்தாரா நடித்த 'டோரா' உட்பட பல படங்கள் கமர்ஷியலாக ஓடவில்லை. அதனாலேயே தற்போது அவர் நடித்து முடித்திருக்கும் 'அறம்', 'கொலையுதிர்காலம்' 'இமைக்கா நொடிகள்' ஆகிய படங்கள் பிசினஸ் ஆகாமல் கிடக்கின்றன. சிவகார்த்திகேயன் உடன் நயன்தாரா இணைந்து நடித்திருக்கும், 'வேலைக்காரன்' படம் வெற்றியடைந்தால் மட்டுமே மேற்கண்ட படங்களுக்கு விமோசனம் கிடைக்கும்.
இந்நிலையில், அறிமுக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் 'கோ கோ' என்ற புதிய தமிழ்ப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. 'நானும் ரௌடிதான்' படத்தின் பாணியில் உருவாகவிருக்கும் இந்த பிளாக் ஹியூமர் படத்திற்கு முழுக்க முழுக்க நாயகியை மையமாக வைத்தே திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம். நயன்தாராவுடன் சரண்யா பொன்வண்ணன், யோகி பாபு ஆகியோரும் நடிக்கும் 'கோ கோ' படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.