ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பல முன்னணி கதாநாயகர்களை வைத்து பல சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். கடைசியாக சுதீப் நடித்த 'முடிஞ்சா இவன புடி' படத்தை இயக்கினார். தமிழில் தோல்வியடைந்த இந்தப் படம் கன்னடத்தில் வெற்றி பெற்றது.
அந்தப் படத்தை அடுத்து தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா, நயன்தாரா நடிக்கும் படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி ஐதராபாத்தில் ஆரம்பமாகி தொடர்ந்து 30 நாட்கள் நடைபெற உள்ளது. இந்தப் படத்திற்காக ராமோஜி பிலிம் சிட்டியில் மிகப் பிரம்மாண்டமான அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
பாலகிருஷ்ணா, நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்த 'சிம்ஹா, ஸ்ரீராமராஜ்யம்' ஆகிய படங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றன. அந்த வரிசையில் அவர்கள் மூன்றாவதாக இணையும் இந்தப் படமும் இடம் பெறும் என பாலகிருஷ்ணா ரசிகர்கள் இப்போதே ஆர்வத்துடன் கூறுகின்றனர்.