ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கொச்சி: நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு, மானபங்கம் செய்யப்பட்ட வழக்கில், மலையாள நடிகர் திலீப்பிற்கு ஜாமின் வழங்க கேரள உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
இந்த வழக்கில், நடிகர் திலீப் ஜூலை, 10ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமின் மனுவை அங்கமாலி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவரை, ஜூலை, 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து கேரள உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனுவை, நடிகர் திலீப் தாக்கல் செய்தார். இந்த மனுவை உயர்நீதிமன்றம் இன்று ( ஜூலை, 24) தள்ளுபடி செய்தது.
மொபைல் போன் எங்கே
இந்த மனு விசாரணையின் போது, அரசு வழக்கறிஞர், இந்த வழக்கில் நடிகர் திலீப் தான் முக்கிய பங்கு ஆற்றி உள்ளார். ஒரு பெண்ணை மானபங்கபடுத்த கூலிப்படையை அமைத்தது நாட்டில் இதுவே முதல் முறை. நடிகை மானபங்கப்படுத்தப்பட்ட போது வீடியோ எடுக்க பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வழக்கில் இன்னும் விசாரணை முடியவில்லை. வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளது. எனவே, நடிகர் திலீப்பிற்கு ஜாமின் வழங்க கூடாது என்றார்.
நடிகர் திலீப் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம்குமார், இரண்டு பேர் சந்தித்து பேசினால், சதி திட்டம் தீட்டினர் என்று கருதி விட முடியாது. பல்சர் சுனிலின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார். பல்சர் சுனில் ஒரு தொடர் குற்றவாளி. அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் சொன்னதை வைத்து திலீப்பை கைது செய்ததை ஏற்க முடியாது. இந்த வழக்கில் திலீப்பை தொடர்புபடுத்த, மிகப்பெரிய சதி திட்டம் நிகழ்த்தப்பட்டுள்ளது. அவரை தொடர்ந்து சிறையில் அடைத்து வைத்தால், பல திரைப்பட படபிடிப்புகள் பாதிக்கப்படும் என்றார்.